என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சேலம் மாணவி தற்கொலை
நீங்கள் தேடியது "சேலம் மாணவி தற்கொலை"
சேலம் அருகே பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குறித்த பிளஸ்-1 மாணவி ஒரு மாத சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17).
இவர் வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் ரவீணாஸ்ரீ வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வகுப்பறையில் அமர்ந்து தனது சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
காலை 9.45 மணியளவில் தோழிகள் அனைவரும் இறைவணக்கம் வழிபாடு செலுத்த பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் இறைவணக்கம் செலுத்தவா? என கூறி ரவீணாஸ்ரீயை அழைத்தனர். அதற்கு அவர் முதலில் நீங்கள் செல்லுங்கள். பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வகுப்பறையிலேயே இருந்தார்.
வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென பிளேடால் தனது இடது கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பள்ளி கட்டிடத்தின் படி வழியாக 3-வது மாடிக்கு ஏறினார்.
பின்னர் பள்ளியின் 3-வது மாடி மொட்டை தளத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் இறைவணக்கம் வழிபாடு நிகழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவீணாஸ்ரீயை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவியை குணப்படுத்த தொடர்ந்து குளுக்கோஸ், ஊசி மருந்துகள் செலுத்தி தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு டாக்டர்களும் மாணவியின் கால்களை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த அடிப்பட்டிருந்ததால் மூளை அறுவை சிகிச்சை டாக்டர்களும் மாணவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடினார்கள். இதற்காக ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுத்து பார்க்கப்பட்டது. இருப்பினும் மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மேலும் நாளுக்குள் நாள் மாணவியின் நிலைமை கவலைக்கிடமானது. இதனால் மாணவி மயக்க நிலைக்கு சென்றார். கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகள் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து அவரது தோழிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
ரவீணாஸ்ரீ சில நாட்களாக தனக்கு உயிர் வாழபிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது நாங்கள் அவளுக்கு தைரியம் சொன்னோம். 27-ந்தேதி காலையில் பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவள் சோகமாக இருந்தாள். நாங்கள் அவரிடம் ஏன்? இவ்வாறு சோகமாக இருக்கிறாய் ? இறைவணக்கத்திற்கு செல்வோம் எழுந்து வா? என்று கூறினோம்.
அப்போது அவள் எங்களுடன் வர மறுத்து விட்டாள். நாங்கள் அவளுக்கு மீண்டும் தைரியம் சொல்லிவிட்டு இறைவணக்கம் செலுத்த வந்து விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் இந்த துயரம் சம்பவம் நடந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்தும் எங்களது ரவீணாஸ்ரீயை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என தோழிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் கூறுகையில், மாணவி ரவீணாஸ்ரீக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள பள்ளி கட்டிட 3- வது மாடியில் இருந்து குதித்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17).
இவர் வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் ரவீணாஸ்ரீ வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வகுப்பறையில் அமர்ந்து தனது சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
காலை 9.45 மணியளவில் தோழிகள் அனைவரும் இறைவணக்கம் வழிபாடு செலுத்த பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் இறைவணக்கம் செலுத்தவா? என கூறி ரவீணாஸ்ரீயை அழைத்தனர். அதற்கு அவர் முதலில் நீங்கள் செல்லுங்கள். பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வகுப்பறையிலேயே இருந்தார்.
வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென பிளேடால் தனது இடது கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பள்ளி கட்டிடத்தின் படி வழியாக 3-வது மாடிக்கு ஏறினார்.
பின்னர் பள்ளியின் 3-வது மாடி மொட்டை தளத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் இறைவணக்கம் வழிபாடு நிகழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவீணாஸ்ரீயை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவியை குணப்படுத்த தொடர்ந்து குளுக்கோஸ், ஊசி மருந்துகள் செலுத்தி தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு டாக்டர்களும் மாணவியின் கால்களை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த அடிப்பட்டிருந்ததால் மூளை அறுவை சிகிச்சை டாக்டர்களும் மாணவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடினார்கள். இதற்காக ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுத்து பார்க்கப்பட்டது. இருப்பினும் மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மேலும் நாளுக்குள் நாள் மாணவியின் நிலைமை கவலைக்கிடமானது. இதனால் மாணவி மயக்க நிலைக்கு சென்றார். கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகள் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து அவரது தோழிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
ரவீணாஸ்ரீ சில நாட்களாக தனக்கு உயிர் வாழபிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது நாங்கள் அவளுக்கு தைரியம் சொன்னோம். 27-ந்தேதி காலையில் பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவள் சோகமாக இருந்தாள். நாங்கள் அவரிடம் ஏன்? இவ்வாறு சோகமாக இருக்கிறாய் ? இறைவணக்கத்திற்கு செல்வோம் எழுந்து வா? என்று கூறினோம்.
அப்போது அவள் எங்களுடன் வர மறுத்து விட்டாள். நாங்கள் அவளுக்கு மீண்டும் தைரியம் சொல்லிவிட்டு இறைவணக்கம் செலுத்த வந்து விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் இந்த துயரம் சம்பவம் நடந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்தும் எங்களது ரவீணாஸ்ரீயை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என தோழிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் கூறுகையில், மாணவி ரவீணாஸ்ரீக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள பள்ளி கட்டிட 3- வது மாடியில் இருந்து குதித்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X